வெள்ளி, ஜூலை 18, 2014

சுலபமாக ஒரு வருடத்தில் பணக்காரன் ஆகலாம்!

பணவீக்கம் அதிகரித்து வரும் இன்றைய நிலையில், சிக்கனம் அதிகம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் சிக்கனம் என்றால் சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றிப் பாருங்கள்,நிறைய பணத்தைச் சேமிக்கலாம்...

* சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஆத்திர அவசரத்துக்கு ஓட்டலை நாட வேண்டியதில்லை.

* வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைத்துப் பராமரியுங்கள். வீட்டுக்கான காய்கறிகள் கிடைக்கும்.

* வெளியில் உணவு உண்ணுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலைக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்லுங்கள்.

* சோடா மற்றும் குளிர்பானத்தைத் தவிர்த்து தண்ணீரை அருந்துங்கள். அது உடலுக்கும் நல்லது.

* அருகாமையில் தோட்டம், பண்ணை இருந்தால் அங்கு சென்று பழங்கள், காளான் போன்றவற்றை வாங்குங்கள். அவை புத்தம் புதிதாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.

* மீன் பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அது நல்ல பொழுதுபோக்காகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

* நொறுக்குத் தீனி, துரித உணவுகளைக் (Fast Food) குறையுங்கள்.

* மதுபானங்களைத் தவிருங்கள்.

* முடிந்தால் சைவ உணவுக்கு மாறிவிடுங்கள். இறைச்சி, கடல் உணவுகள் பொதுவாக விலை கூடியவை.

* சுற்றுலா செல்வதானால் உணவையும், தண்ணீரையும் நீங்களே எடுத்துச் செல்லுங்கள்.

* தேவைக்கு அதிகமாகச் சமைக்காதீர்கள். உணவை வீணாக்காதீர்கள், கொட்டாதீர்கள்.

* சத்துள்ள, தரமான, ஆனால் மலிவான உணவாகப் பார்த்து வாங்குங்கள்.

* பாட்டில் தண்ணீரை தவிர்க்கலாம். தேவைப்பட்டால் தண்ணீரைச் சுடவைத்து அல்லது வடிகட்டிக் குடியுங்கள்.

* அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுப்பொருட்களை வாங்குங்கள். அவை விலை மலிவாக இருக்கும்.

* உள்ளூர் உணவுகளை வாங்குங்கள். முடிந்தால் மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வாங்குங்கள்.

நன்றி: மாலைமலர்

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

கருத்துரையிடுக