செவ்வாய், நவம்பர் 17, 2015

மரண அறிவித்தல்

காசிலிங்கம் படிகலிங்கம் 
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், 798 கட்சன் வீதி, வட்டக் கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த, தற்போது விசுவமடுவில் வசித்தவருமாகிய திரு.காசிலிங்கம் படிகலிங்கம் அவர்கள் நேற்றைய தினம்(16.11.2015)  இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற காசிலிங்கம் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  
காலஞ்சென்ற கௌசலாதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சிவக்கொழுந்து ('அல்லைப்பிட்டி ஆச்சி') தம்பதியினரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(குலசிங்கம்) தங்கம்மா தம்பதியினரின்அன்பு மருமகனும், 
சந்திரகாந்த், பிரசாந்த் ஆகியோரின் அன்புத்தந்தையும், லீலாவதி(இலங்கை), கமலாவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நடராஜா, மற்றும் செல்வரத்தினம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி(அல்லைப்பிட்டி), 

இராசம்மா(யோகபுரம்,மல்லாவி),தெய்வானை(அல்லைப்பிட்டி), நாகம்மா(மண்டைதீவு), மற்றும் திருமதி.சிவகுரு கனகம்மா(மண்டைதீவு) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(மண்டைதீவு), செல்லத்துரை-'சாத்திரியார்'(விசுவமடு) ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிஷ்யந்தி(அவுஸ்திரேலியா),கஜந்தி(இலங்கை) கஜன்(அவுஸ்திரேலியா), ஆதவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் நேற்றைய தினம்(16.11.2015) திங்கட்கிழமை பிற்பகல் அவரது விசுவமடு இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் விசுவமடு 12 ஆம் கட்டையில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப் பட்டது.
உற்றார், உறவினர்,நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  


தகவல்:திருமதி. சாருமதி சொர்ணலிங்கம்(சகோதரி)



தொடர்புகளுக்கு :
குடும்பத்தினர்.
0094-779671954

செவ்வாய், நவம்பர் 10, 2015

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எமது உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


"ஒன்றுபட்டு உயர்வோம்"
ஆசிரிய பீடம் 
அந்திமாலை.