இன்றைய குறள்
அதிகாரம் 96குடிமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. (960)
பொருள்: ஒருவர் தமக்கு நன்மையை விரும்புவாராயின், வெட்கப்படவேண்டிய செயல்களுக்கு வெட்கப்படுகின்ற 'நாணமுடைமை' அவருக்கு வேண்டும். உயர்ந்த குடும்பத்திற் பிறந்த பெருமையை ஒருவர் விரும்புவாராயின் பணிவு கொள்ள வேண்டிய யாவரிடத்திலும் 'பணிவுடைமையை' விரும்புவாராக.