இன்றைய குறள்
அதிகாரம் 94 சூது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
வேண்டற்க, வென்றிடினும் சூதினை; வென்றதுதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று. (931)
பொருள்: தான் வெல்லும் ஆற்றலை உடையவனாயினும் ஒருவன் 'சூதாட்டத்தை' விரும்பக் கூடாது. வெற்றியால் வரும் பொருளும் 'தூண்டில் இரும்பை' இரை என்று மயங்கி(நம்பி) மீன் விழுங்கினாற் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக