ஞாயிறு, மார்ச் 04, 2012

பிரபலங்கள் - 9


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

உன்னை நினைக்கிறோம்….. 

எற்றி எதிரொலிக்கும் தமிழ்.
சுற்றிப் பல தலைமுறைகளையும்
பற்றிப் பாய்கிறது பாசியின்றி.
பற்றுடை பாரதி வரிகள்
வெற்றி வரிகள, பாரினிலே
சுற்றம் காணும் சுகந்தம்
கொற்றவனைத் தமிழ் உலகு
பெற்றநாள் இன்று நினைக்கிறோம்.
உணர்வுப் பூக்கள் – எனது 3வது நூலில் இடம்பெற்ற சில வரிகள்…..
பாரதியே! தமிழ்க் கவிதை வாரிதியே!
பேரதிர்வான உன் வாலிபப் பண்களுக்குத் 
தீரமதிகம், தீர்க்கமும் பூமியில் அதிகம்.
ஊரதிரும் தாக்கங்கள் உருவானது உண்மை.
பேரதிசயம் பெற்ற கவிதையின் தாக்கங்கள்
வேரதிகம் விரித்தது பெண்கள் உலகிலும். 
சாரமதிகமான இவன் சுந்தர வரிகளை
யாரதிகம் எடுத்தாளவில்லை சுய வாழ்விலே!
பாரதியே! தமிழ் பாவுலகில் நீயுமொரு – யுக
சாரதியானாலும் உன் வாழ்வில் சரிபாதியாக
நீரதியெனக் கவிபாடிய உன் கண்ணம்மாவை
ஆராதிக்காத உன் சுய வாழ்வுப் பாதையை
கூரதிகம் உன் கவியானாலும் எடுத்துக்
கூறாத மனிதருண்டோ! நீயறிவாயா!
வீரதீரனாகிலும் சரிபாதியான வாழ்விற்கு மனைவி
வேரதுவாக வாழ்கிறாளென்பது பெரிய உண்மை.
இறுதியில் அறிந்து கொண்டாய்…..
11-12-2008. பாரதியார் பிறந்த நாளுக்காக எழுதியது

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

Thank you very much your service anthimaalai. God bless you.
All anthimaalai readers are very busy and this is sunday. We two sides can enjoy with this..poem..I will bring the tea. ..with cake......

கருத்துரையிடுக