செவ்வாய், ஜூன் 11, 2013

அமெரிக்க பழங்குடியினர் பற்றிய ஒரு பார்வை

முதன் முதலாக அமெரிக்காவில் இறங்கியவர் 'கொலம்பஸ்' என்று கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அவர் அங்கு வருவதற்கு முன்னரே நூற்றுக்கணக்கான பழங்குடியினங்கள் வாழ்ந்து வந்துள்ளன. இந்த பழங்குடி மக்கள் ஆசிய கண்டத்தில் இருந்து சுமார் 25 ,000000 ஆண்டுகளுக்கு முன் பெரிங் ஸ்ட்ரேயிட்ஸ் (Bering Strait ) என்ற அமெரிக்க கண்டத்தையும் ஆசிய கண்டத்தையும் இணைத்த சிறு பாதை வழியாக அலாஸ்காவுக்குள் நுழைந்து பின் படிப்படியாக வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டங்களில் முழுமையாக பரவினர்.
இவ்வாறு இவர்கள் பரவ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடித்தது.கொலம்பஸ் அமெரிக்காவுக்கு முதன் முதலாக வந்தபோது இரண்டு அமெரிக்க கண்டங்களிலும் இவர்களின் எண்ணிக்கை 7½ கோடியாக இருந்தது.அங்கே தங்கி விட்ட இவர்கள் அங்குள்ள காலநிலைக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர் .இக்காலகட்டத்தில் சுமார் இரண்டாயிரம் மொழிகள் உருவாயின.
ஒரு சில கூட்டங்கள் நாடோடிகளாக இருந்தாலும் இன்னும் சிலர் நிரந்தர குடிகளாக இருந்துகொண்டு சோளம்,கடலை,புகையிலை,இறப்பர் போன்ற பயிர் வகைகளை விளைவிக்க கற்றுக்கொண்டனர்.
இவ்வாறு நிலையான இடங்களில் தங்கியவர்கள் நாளடைவில் பெரிய கூட்டங்களாகி வாழ்ந்தனர் .தங்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுத்து கொண்டனர்.வருடம் முழுவதற்கும் தேவையான தானியங்களை விளைவிக்க கற்றுக்கொண்டனர்.வேண்டிய ஆடைகளை பருத்தியிலிருந்து நெய்துகொள்ளல்.மட்பாண்டங்களை உருவாக்கல் போன்றவற்றை இவர்கள் கற்றுக்கொண்டனர்.
ஓஹையோ நதிக்கரையில் வாழ்ந்துவந்த பழங்குடிமக்களுக்கு மண்ணினால் மனித மிருக சிலைகள் செய்யவும் கோட்டைகள் கட்டவும் தெரிந்திருந்தது.தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களையும் ஆபரணங்களையும் செய்து மற்ற பழங்குடி மக்களிடம் அவற்றை விற்பதிலும் ஈடுபட்டிருந்தனர் . இப்பழங்குடி மக்களிடம் சொத்துக்கள் இருக்கவில்லை.எல்லா நிலமும் எல்லோருக்கும் பொதுவாக காணப்பட்டது.

ஒன்றாக வேட்டையாடி அந்த கிராமத்தில்... மேலும் 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

oh! i readthis. good infi .thank you.
vetha.

கருத்துரையிடுக