சனி, மே 25, 2013

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி
 

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பொருள்: எத்தகைய உயர்வான பொருளாக இருப்பினும் அது தாராளமாகக் (அடிக்கடி) கிடைத்தால் அதன் மதிப்பை நாம் உணர மாட்டோம். தமிழ்ச் சமுதாயத்தில் 'பால்' எல்லாத் தரப்பு மக்களுக்கும் இலகுவாகக் கிடைக்கும் பானம் அல்ல. அத்தகைய 'பால்' அடிக்கடி கிடைத்தால் அதன் சுவையை நாம் அனுபவித்து உணர மாட்டோம். விரும்பிய ஒன்றை நாம் அடைந்து விடுகிறோம் எனும் நிலை வரும்போது தொடர்ந்து அதன்மேல் பிடிப்பு இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதை விளக்கவே நம் முன்னோர்கள் இந்தப் பழமொழியைக் கூறி வைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக