வியாழன், மே 23, 2013

இன்றைய சிந்தனைக்கு

லாவோட்சு 

'இன்மை' 'வெறுமை' என்பன எளிமையைக் குறிக்கும். "நிறைந்திருப்பது" என்பது கர்வத்தைக் குறிக்கும். பணிவும் மென்மையும் எளிமையின் அடையாளம். சம பலமுடைய படைகள் சந்திக்கும்போது பணிவு உடையவனே வெற்றி பெறுவான். "நீரைப்(தண்ணீரைப்) போன்றவனே சிறந்த மனிதன். எல்லாப் பொருள்களுக்கும் தண்ணீர் பயன்படுகிறது; ஆனால் அவற்றோடு தண்ணீர் போட்டியிடுவதில்லை. எல்லோரும் ஏளனமாய்க் கருதும் தாழ்வான இடங்களில்தான் அது வசிக்கிறது. ஆனால் அது இல்லாது போனால் உலகின் மூச்சு நின்று போய் விடும்". வன்மைதான் வெற்றி பெறும் என்று உலகமே நம்புகிறது. அது மூடத்தனம். மென்மைதான் வெற்றி பெறும் என்பது அறிவாளிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக