ஞாயிறு, டிசம்பர் 16, 2012

கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!

தொகுப்பு:சந்தியா திரவியம், நோர்வே


1.
பொருட்படுத்தாதீர்கள்
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2.
எதையும் யாரிடமும்  எதிர்பார்க்காதீர்கள்
 ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3.
எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4.
தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

இப்படிக்கு
ஆறுதல்

3 கருத்துகள்:

Jaleela Kamal சொன்னது…

மிக அருமை

Kumar சொன்னது…

We can telling is eacy. but we cant doing becouse of we have brain and feeling, angry become from feeling, no body cant dicide and doing, we are saddenly get an angry.

vinothiny pathmanathan dk சொன்னது…

நல்லவிசயம் .முயன்று பார்ப்போம். எதிர் பார்ப்பதால் தானே ஏமாற்றம் .

கருத்துரையிடுக