ஆக்கம்:ஜிம்
துடிப்புடன் செயற்பட முதல் வழிவாழ்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது ஆனால் வாழ்கையில் வெற்றி பெற்றவர்களை, பெரும் பணத்தில் புரள்பவர்களை பார்க்கும் போது அவர்களை போல் நம்மால் செயல் பட முடியவில்லையே,சாதிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் வருகிறது .எல்லாரும் மனிதர்கள்தாம்.ஒரே கல்லூரியில் படித்த இருவரில் ஒருவன் பெரிய பதவியை அடைகிறான் இன்னொருவன் சாதரணமாக வேலை பார்த்து கொண்டு இருக்கிறான்.இருவரும் கற்ற கல்வி ஒன்று தான்.ஒன்றாக பட்டம் வாங்கியவர்கள் தான்.
ஆனாலும் ஒருவன் மட்டும் வாழ்கையில் உயர முடிகிறது.எப்படி?எதையும் சாமாளிக்கும் திறமை அவனிடம் இருக்கிறது.கார் பங்களா என்று சொகுசாக வாழ முடிகிறது.ஆடம்பரமாக வாழ்கிறான் இந்த வெற்றியின் ரகசியம் என்ன?இரண்டாமவன் சிந்தித்து பார்க்கிறான் வாழ்கையில் உயர்ந்தவன் தனது திறமைகளை வெளிபடுத்துபவன். எதிலும் துணிந்து செயல் படுவன் என்று தெரிகிறது.எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காண்பவன் என்பதை உணர்கிறான்.ஆனால் அவனை போல் தன்னால் முடியவில்லையே ஏன்?இரண்டாமவன் சிந்தித்து பார்க்கும் போது விடை கிடைக்கிறது
எந்த விசயத்திலும் இவன் மெத்தனமாக நடந்து கொள்பவன் பழக்க வழக்கங்கள் அப்படி.அவனது பெற்றோர் அவனை கண்டிப்பாக வளர்த்து விட்டார்கள்.புதிதாக எதையாவது செய்வது என்றால் பயம்.கல்லூரிக்கு போகும் போது கூட ஒரே பாதையில் சென்று வருபவன்.வேறு பாதையில் போக பயம்.மாற்றங்களை விரும்பாதவன்.எல்லா விசயத்திலும் பெற்றோர்களை போலவே வளர்ந்து கொள்ள வேண்டும் என்று வளர்க்கப் பட்டவன்.உள்ளுரிலே வேலைக்கு சேர வேண்டும் என நினைத்தான். வெளியூர் சென்றால் நிறைய பணம் கிடைக்கும், விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்றாலும் ஏற்று கொள்ள விரும்பவில்லை.
பழக்கத்தின் பயன்.'தலைவிதி' என்று நினைத்து கொள்வான். அதனால் அவனால் வாழ்கையில் வேகமாக முன்னேற முடியவில்லை.பொதுவாக துடிப்புடன் செயல்படுவர்கள் திறமையுடன் செயல்படுவர்கள்தான் பெரிய அளவில் சாதனைகளை செய்ய முடியும்.இதற்காக அவர்கள் முதலில் தம்மை சில கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து கொள்ள வேண்டும். மனதில் சுதந்திரம் பெற வேண்டும்.பழக்க வழக்கத்திற்கோ ,கட்டுப்பாட்டிற்கோ அடங்கி பெட்டி பாம்பாக இருக்க கூடாது
முதலில் தனக்கு சுந்ததிர உணர்வு ஏற்படும்படி மனப்பக்குவம் அடைய வேண்டும். 'சுதந்திர உணர்வு' என்றால் என்ன? அது எப்படிக் கிடைக்கும்.
நான் வயது வந்த இளைஞன் என்னால் சுதந்திரமாக வாழ முடியும்.நினைத்ததை செய்ய முடியும் யாரும் நம்மை கட்டுபடுத்த முடியாது என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.ஒருவன் மாணவனாக இருந்த போது அரசியலில் பங்கேற்று அரசை எதிர்த்து போரிட வேண்டி இருந்தது.அவனை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.பல மாதங்கள் சிறையில் அடைபட்டு இருக்க நேர்ந்தது.அவன் சிறையில் அடைபட்டதால் தன் சுந்திரம் பறி போய்விட்டதாக நினைத்து கொள்ளவில்லை.என்னை நான்கு சுவர்களுக்குள் அடைத்து விட்டார்கள் அதினால் என்ன?என் மனதை யாரும் கட்டு படுத்த முடியாது.நான் சிந்திக்க முடியும்.என்னால் எதிர்காலத்திற்கான திட்டத்தை வகுக்க முடியும்.என்று எண்ணினான் ,எதிர்கால திட்டங்களை எழுத தொடங்கினான்.சிறையில் இருந்து விடுவிக்க பட்டதும் அவன் எழுதிய புத்தகங்கள் அச்சாகி வேகமாக விற்க துவங்கியது.பெரிய அளவில் பெயரும், புகழும்,பணமும் கிடைத்தது.அந்த புத்தகத்தை படிபவர்கள் எப்படி ஒரு மனிதன் சுந்திரமாக வாழ முடியும் என்பதை உணர்ந்தார்கள்.சுதந்திர உணர்வு பெற்றவர்கள் தான் வாழ்கையில் நினைத்ததை சாதிக்க முடியும்.எதையும் அதிவேகமாக செய்து முடிக்க முடியும்.
ஒருவன் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி விட்டால் அவன் உடலை சுற்றி அந்த பழக்கவழக்கங்கள் கயிற்றை போல சுற்றி கொண்டு விடும்.அவன் கை கால் கட்டபட்டவனை போல் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே செயல் பட முடியும்.அவன் தன் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும்.தன்னை சுற்றி உள்ள கயிறை அறுத்து கொண்டு வெளியே வர வேண்டும் இது முடியுமா?முடியும்.துடிப்புடன் செயல் பட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட முழு மூச்சுடன் செயல் பட வேண்டும்.உதாரணமாக பூமியின் ஈர்ப்பு சக்தியை பற்றி நமக்கு நன்றாக தெரியும்.ஒரு கல்லை தூக்கி போட்டால் மீண்டும் பூமிக்கே வந்து விடும்.இந்த ஈர்ப்பு சக்தியை மனிதன் சமீபகாலமாக வென்று காட்டி இருக்கிறான்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWlH8OUGXKeALm0y-Vod1MDgBWLIvQuC8_Z9FaTnOBxwhnDQxBCnlMp_QRcxuHb5t2vZa18-o36GD-q7oS0jctJ7HNjndfYCb0cwrs84MOSniUS2WSeg2TQMLjMXqwnGgYXGe-F51p0mg/s200/images+%25284%2529.jpg)
அதன் விளைவாக தான் இன்று வான வெளியில் ஆராய்ச்சி செய்ய போகிறவர்கள் ராக்கெட்டின் உதவியுடன் வானவெளி கப்பலில் உயரமான இடத்தை அடைய முடிகிறது.பூமியின் அபார ஈர்ப்பு சக்தியை வெல்ல முடிந்த மனிதன் பழக்கவழக்கங்களை வெல்ல முடியாதா?முடியும்.முயன்றால் முடியாதது எது?
(தொடரும்)
1 கருத்து:
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
கருத்துரையிடுக