திருமணத்திற்கு
அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது.
திரு மண மான பெண்களில் சுமார் ஐம்பது சதவி கிதத் தினர் தன் கணவன் அல்லாத
வேறு ஆணு டன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத்
தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?
*
வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு
அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியு லகத் தொடர்பு, பல ஆண்களுடன்
பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான
நட்பு போன்றவை யும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம். தவிர கணவனைவிட
அலுவலகத்தில் சக ஆண் ஊழியர் களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக
இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும்,
விஷயங்களும் கிடைக் கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி
வகுத்து விடுவதும் உண்டு.
*
ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின்
ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்ப தாக உளவியல் நிபுணர்கள்
தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு.
அவர்கள் இப்படிப் பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோ
தத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.
திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?
* தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.
அதேபோல
தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கண
வனால் அநாகரிக மாக விமர்சிக் கப்பட்டாலோ, குறை கூறப்பட்டா லோகூட அந்தப்
பெண் விரக்தி யடைந்து வேறு நபரை நாடுகிறாள்.
*
திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம் பதியருக்கிடையேயான
நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும். திருமணத்திற்கு முன்போ
அல்லது திருமணமான புதிதி லோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு
சில விஷயங் கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு
அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.
* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப் போகும்
கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனை களும் இருக்கும்.
திருமணத் திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய் யாகும் போது, தனக்கு வாய்
த்த கணவன் குணங்கள் எதிர் பார்ப்பிற்கு எதிராக அமை யும்போது, சில பெண்கள்
தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.
*
தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள் ளாத பட்சத்திலும்,
அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண் களுடன் உறவு இருப்பதாகவும் உணரும்
பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று
இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.
நன்றி:vidhai2virutcham.com
1 கருத்து:
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
கருத்துரையிடுக