ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

500 ரூபாய் நோட்டு

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார்,. பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்..
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய் தாள்(நோட்டு) பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிருக்குத்
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக் கொல்லிகளும்.
ஆகையால் 'தன்னம்பிக்கையை' இழக்காமல் வாழுங்கள்" என்றார்.

1 கருத்து:

மாசிலா சொன்னது…

அருமையான அறிவுரை.

எல்லாமே மனதளவில்தான் உள்ளது.
பணச்சீட்டை நாம் என்னதான் அசிங்க படுத்தினாலும் அது எவரிடமும் செல்லுபடியாகும். ஏனென்றால் அதின் மதிப்பை நிர்ணயிப்பது மனிதால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையே. அதாவது ஒரு கற்பனை பாத்திரமே.
மனிதன் அப்படியல்லவே. அவன் தான் வாழும் சமுதாயத்தில் அவன் சிரமப்பட்டு உருவாக்கிக் கொண்ட ஒரு மரியாதை எனும் குடையின் கீழ் நிழலுடன் வாழ்கிறான். நம் காலங்களில் இந்த மரியாதையை நிர்ணயிப்பது பணம் பொருள் என்பவை அடிப்படை மூலாதாரமாக இருக்கிறது.

இது வருந்தத் தக்கதுவே.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

கருத்துரையிடுக