சனி, ஏப்ரல் 21, 2012

நிலவில் தமிழன் கால் வைக்கும் நாள்



உலகில் வெறும் இரு நூறு ஆண்டுகள் வரலாற்றினை உடைய ஆஸ்திரேலியா இன்று உலகமே வியந்து நோக்கும் வண்ணம் சகல துறைகளிலும் முன்னேறியிருக்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டி போடுமளவிற்கு, அமெரிக்க நாணயப் பெறுமதியினை அடிக்கடி முந்தும் அளவிற்கு வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடு தான் ஆஸ்திரேலியா. நம்ம தமிழர்களின் வரலாறு என்ன என்று கேட்டால் நாம் அனைவரும் வாய்ல இருந்து சீத்துவாய் ஊத்தா குறையா "கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” அப்படீன்னு ஒரு வசனத்தை திரும்ப திரும்ப பேசி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இனம் தமிழினம் அப்படீன்னு சொல்லி எம் பெருமையை நாமே பீத்திக்குவோம். 

ஆனால் வெள்ளைக்காரங்க சொல்லை விட எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதனால எல்லா துறைகளிலும் துரித கதியில் வளர்ச்சி காண்றாங்கோ. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஓர் இனத்தால மூனுக்குப் (நிலாவுக்கு) போக முடியலை எனும் போது வெட்கமா இல்லையா? எம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சுக்கனுமுங்க. தமிழர்களின் ஒரே பண்பு என்ன தெரியுமா? எதற்குமே ஓர் எல்லை வைப்பது. இத்துப் போன கலாச்சாரப் பண்பிலிருந்து விலக முடியாது இந்த வழியில் தான் நாம வாழ்வோம் என அடம் பிடிப்பது. இந்தப் பண்புகள் உள்ள வரை எந்த ஜென்மத்திலும் தமிழனால முன்னேறவே முடியாதுங்க. 

முதல்ல இந்த கேவலமான குணங்களை தூக்கி குப்பையில போடனுமுங்க. எம்மில் நூற்றுக்கு 99 வீதமான தமிழர்கள் பெற்றோர் சொற்படி, எம் முன்னோர் சொற்படி எதற்குமே ஓர் எல்லை வைத்து வாழ்வதையே பழக்கமாக கொண்டிருக்கிறோம். கல்வி என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி ஓர் கோடு கீறி அதன் மேலே வாழ்றோமுங்க. உதாரணமா ஒருத்தன் கம்பியூட்டர் டிகிரி படிக்கிறான் என்றால் அவன் டிகிரி முடிச்சதும் எப்படா வேலை கெடைக்கும் என்று தேடிக்கிட்டு இருப்பான். வேலை கிடைச்சதும் அந்த வேலையே கதி என்று கிடந்து காலத்தை ஓட்டிக்குவான். பொத்தாம் பொதுவா அநேக தமிழர்கள் இப்படித் தானுங்க.

டிகிரிக்கு அப்புறமா மாஸ்டர்ஸ் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக