வெள்ளி, ஜனவரி 07, 2011

எந்தக் குழந்தையும் அத்தியாயம் - 9

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
வாசகப் பெருமக்களே! கர்ப்பப் பையிலிருக்கும் சிசுவிற்கு, வெளியே நடக்கும் சின்னச் சின்ன அதிர்வுகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும்(கிரகிக்கும்) தன்மை உண்டு. கருப்பையில் கருவைச் சுற்றி ஒம்னியன் என்னும் சவ்வு உள்ளது, மேற்படி ஒம்னியோடிக் திரவத்தில்தான் சிசுவானது நீந்திக்கொண்டிருக்கிறது. தாயின் அசைவுகளும், பேச்சுக்களும் இந்தத் திரவத்தின் ஊடாகத்தான் குழந்தையைச் சென்றடைகிறது. இந்நிலையில் ஏற்படும் அதிர்ச்சி அல்லது பாதிப்பு மேற்கூறப்பட்ட உண்மைச்  சம்பவத்திற் கூறியதுபோல் பல வருடங்களுக்குப் பிறகும் பாதிப்பை, பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

இதேபோல் கர்ப்பவதியான தாயானவள் ஏதாவதொரு கடுமையான நோயினால் பீடிக்கப் பட்டாலும் கடுமையாகப் பாதிக்கப் படுவது கருப்பையிலுள்ள குழந்தையே. இவ்வாறு கூறப்படுவதற்குக் காரணம் பெண்ணானவள் கர்ப்பமுற்றிருக்கும்போது, அவளது உடலானது கருவிலிருக்கும் குழந்தையை பேணி வளர்ப்பதற்காகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவளது உடலில் 'நோய் எதிர்ப்புச்' சக்தியானது, மிகவும் குறைவாக இருக்கும். இவ்வாறான நிலையில் அவள் நோய்களால் பீடிக்கப் படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். சிலவேளை நோய்களால் தாக்கப் படுமிடத்து 'மருந்து வகைகளைப்' பாவிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது, இம்மருந்துகளும் குழந்தைக்குத் தீங்காக அமைகிறது. இதனாலேயே கர்ப்பவதியானவள் நோய்கள் ஏற்படாமல் தன்னைக் காத்துக் கொள்வது அவசியமாகிறது.
ஒரு கர்ப்பிணிப் பெண் பின்வரும் நோய்களிலிருந்து தன்னைக்  காத்துக் கொள்ளல் அவசியமாகிறது:

  • சாதாரண காய்ச்சல் 
  • நெருப்புக் காய்ச்சல் 
  • சின்னமுத்து 
  • அம்மை 
  • கூகை கட்டு(Rubella)
  • பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்கள் 
  • கொனரியா(Gonorrhea) 
  • சிபிலிஸ்(Sifilis)
  • எயிட்ஸ் 
  • சிறுநீரகத் தொற்று
  • சொறி, சிரங்கு. 
இத்தகைய நோய்களால் தாயானவள் தாக்கப்படுமிடத்து, அவளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மிகவும் வீரியம் கூடியவையாக இருப்பதால் அவளுக்கு நிவாரணம் தருவதைவிடவும் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. இதனால் குழந்தையானது அங்கவீனமுள்ள(Handicap) அல்லது மூளை வளர்ச்சி குன்றிய(Cerebral Parese) பிள்ளையாக பிறப்பதற்கு வாய்ப்புள்ளது.

நோய்களுக்கு அடுத்தபடியாக தாயானவள் கவனத்தில் கொள்ளவேண்டியது கர்ப்பத் தடை முறைகளில் ஏற்பட்ட ஒழுங்கீனங்களாகும்.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

1 கருத்து:

priya denmark சொன்னது…

det er fint.

கருத்துரையிடுக