ஞாயிறு, ஜனவரி 09, 2011

அந்திமாலையின் சமுதாய நற்பணி

கடந்த மூன்று மாதங்களுக்கு  முன்னதாகத் 'தீவகனில்' வெளியான செய்தியாகிய 'இவருக்கு உதவுங்கள்' என்ற தலைப்பிலான வேண்டுகோளில், மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அல்லைப்பிட்டியில் வசித்துவருபவருமாகிய, கடந்தகால யுத்தத்தில் தனது ஒரு காலை இழந்த திரு.வில்லவராஜா குருபவராஜா என்பவருக்குச் 'சிறு தொழில்' ஊக்குவிப்புத் தொகை ரூபாய் பத்தாயிரத்தை(10,000) வழங்குவதற்கு அந்திமாலையின் ஐரோப்பிய வாசகர் ஒருவர் முன்வந்தார். தனது பெயரைக் குறிப்பிடவோ, விளம்பரப் படுத்தவோ வேண்டாமென்று கேட்டுக்கொண்ட மேற்படி வாசகர், இத்தகைய நற்செயலின்மூலம் கிடைக்கும் பெருமை அல்லது புகழ், தான் 

மிகவும் நேசிக்கும் 'அந்திமாலை' இணையத்திற்கே சேரவேண்டுமென்று தான் விரும்புவதாகவும் அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, இன்றைய தினம் (9.01.2011) அந்திமாலையின் பிரதிநிதிகளால் அல்லைப்பிட்டியில் உள்ள திரு.வில்லவராஜா குருபவராஜாவின் இல்லத்தில் வைத்து, மேற்படி தொகை அவரிடம் கையளிக்கப் பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அந்திமாலை ஊடாக, அந்திமாலையின் சார்பாகச் செய்யப்பட்ட முதலாவது சமுதாய நற்பணி இதுவாகும்.

மிக்க அன்புடன் 
ஆசிரியபீடம் 
அந்திமாலை

14 கருத்துகள்:

amalathas சொன்னது…

நல்ல விசயம் பாராட்டுக்கள் . ஆரு குத்தினாலும் அரிசியானால் சரிதானே . அந்த முகம் தெரியாத பெரிய உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.

Nimalan, Canada சொன்னது…

It is great thing.keep it up.

Sukumar, Sri Lanka சொன்னது…

very Nice job.

PA. Lawrence, UK சொன்னது…

very good. God bless you.

Inthiran, France சொன்னது…

nalla muyartsi, paraddukal.

Ranjithkumar, Riyadh, Saudi Arabia. சொன்னது…

nalla muyrchi vaalththukiren.

Navam Finland சொன்னது…

Your work is praiseworthy.

Vijayan, UK. சொன்னது…

good, keep it up.

சீலன், ஜேர்மனி சொன்னது…

பாராட்டுக்கள்

ஆசிரியபீடம், அந்திமாலை சொன்னது…

பாராட்டுக்களைத் தெரிவித்த அனைவருக்கும், உதவியளித்த வாசகரின் சார்பாக உளமார்ந்த நன்றிகள்.

ஆசிரியபீடம்
அந்திமாலை

Ravi denmark சொன்னது…

Excellant.

Easwaran 6900 skjern சொன்னது…

I like et.

kumar Uk சொன்னது…

eautiful

K .R .S சொன்னது…

Nala ulangalukku manam niritha paradukall anrum anpudan unkelel oruvan.

கருத்துரையிடுக