
மிக்க அன்புடன்
ப. மோகன்ராஜா
திருமங்கலம், மதுரை
தமிழ்நாடு, இந்தியா
உன் பெயர் 'வெற்றி' இடமாக இருப்பதும், வெற்றிடமாக இருப்பதும் உன் கையில்தான்.
***
ஆணின் அற்புத வருமானத்தில் நடத்த முடியாத குடும்பத்தை பெண் தனது 'அற்ப' வருமானத்தில் அழகாக நடத்துவாள்.
***
வாழ்ந்த பிறகும் வாழ்பவன் 'சரித்திரம்' கண்டான். வாழும்போதும் வாழாதவன் தரித்திரம் கண்டான்.***
பிறர் துன்பத்தில் சிரிப்பவன் கபடன். தன் துன்பத்திலும் சிரிப்பவன் அறிஞன்.
***
***
கடன் வாங்கிப் பழகியவனுக்குக் கடமை செய்யத் தெரியாது. கடமை செய்து பழகியவனுக்கு கடன் வாங்கத் தெரியாது.
***
***
கடமை செயபவனுக்குக் கடிகாரமுள்தான் ஆசிரியன்.
***
***
வாழ்ந்து வீழ்ந்தோம் என சோர்வடையாதே! வீழ்ந்தும் வாழ்வோம் என ஓய்வடையாதே!
***
இறை வணக்கம் மட்டும் உன்னைச் செல்வந்தன் ஆக்கும் என்றால், கோயில் வாசலில் கிடக்கும் ஆண்டியும் அரசனாகியிருப்பானே?
***
***
பல புள்ளிகளுக்கிடையே வளைந்து செல்லும் கோடுதான் 'கோலம்' எனும் அழகைத் தரும். பல உறவுகளுக்கு இடையே வளைந்து கொடுக்கும் குணம்தான் உயர்வு என்ற புகழைத் தரும்.
***
முயல் ஆமையால் தோற்றது என்று கூறவேண்டாம். 'முயலாமையால்' தான் தோற்றது.
***
5 கருத்துகள்:
மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.
நல்ல கருத்துடைய வரிகள். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
கருத்துள்ள வரிகள். தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம் .பாராட்டுக்கள்
Excellant.
பாராட்டுத் தெரிவித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள்.
கருத்துரையிடுக