இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதுஅவள்
யாப்பினுள் அட்டிய நீர். (1093)
பொருள்: அவள் என்னைப் பார்த்தாள்; நான் அவள் முகத்தைக் கண்டதும், வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள். அந்தக் குறிப்பு எங்கள் இருவரின் அன்புப் பயிருக்கு வார்த்த நீராகியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக