இன்றைய குறள்
அதிகாரம் 101 நன்றிஇல் செல்வம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. (1007)
பொருள்: வறியவர்க்கு ஒன்றும் கொடுத்து உதவாதவனுடைய செல்வம் மிக்க அழகும், ஆரோக்கியமும் உள்ள ஒருத்தி மணம் செய்து கொடுப்பவரில்லாமையால் கணவன் இன்றித் தனியளாய் முதுமையுற்றது போலப் பலனின்றி அழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக