ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து 

மனதால் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக இராச்சியம் அவர்களுடையது.

இந்தப் பிறவியில் துக்கம் அடைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இறைவன் அவர்களைத் தேற்றுவார்.

பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இறைவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள்.

மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத் திருப்தியை இறைவன் அளிப்பார்.

மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.

தூய்மையான எண்ணமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இறைவனின் அருகாமையிலிருப்பார்கள்.

அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இறைவன்  அவர்களைத் தன் பிள்ளைகள் என அழைப்பார்.

நன்மை செய்வதற்காகத் தண்டிக்கப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரலோக இராச்சியம் அவர்களுக்குரியது.

உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுகின்ற காரணத்திற்காக  எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கெதிராகச் சொல்வார்கள். ஆனால் மக்கள் உங்களுக்கு அவற்றைச் செய்யும் பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆகிறீர்கள். அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். இறைவனுடைய வெகுமதி உங்களுக்கு காத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக