புதன், பிப்ரவரி 23, 2011

ஓர் அறிமுகம்

ஒரு விஞ்ஞானி அத்தியாயம் 4

நிலம் உயர்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற இவரது ஆய்வுக் கட்டுரையை இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த டாக்டர் நிதிஸ் பிரியதர்சி(Nitish Priyadarshi) அவர்கள் தனது nitishpriyadarshi.blogspot.com என்ற தனது வலைத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தற்பொழுது "பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது" என்ற இவரது  இரண்டாவது புத்தகம் 'நியூ செஞ்சுரி பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டிருக்கிறது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நில அதிர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் 
சிறிய வயதில் விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்திருக்கிறது. இவரது பெற்றோரின் ஆசையும் அதுவேயாகும். சிறு வயதில் பெற்றோருடன் சர்ச்சுக்கு(தேவாலயத்திற்கு) செல்வது வழக்கம். இவர் ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ஞாபகார்த்தமாக இவருக்கு 'ஐன்ஸ்டீன் பொன்முடி' என்று ஞானஸ்நானப் பெயர் வழங்கப் பட்டது.
பெயரைத் தெரிவு செய்தது இவரது தந்தையார், ஆனால் விஞ்ஞானியானது நிச்சயம் எதிர்பாராத ஒன்றுதான் எனக் கூறும் இவர் "எல்லாமே ஒரு நொடியில் மாறிவிட்டது" என்கிறார்.
அதேபோல் இவர் தன் நண்பர்களுடன் ஏதாவது ஒரு அற்ப விசயத்தைப் பற்றிப் பேசினாலும் அதன் ஆதி முதல் அந்தம் வரையிலும் விரிவாக அலசுவாராம். இதனால் நண்பர்கள் "போதும் விட்டுடுய்யா" என்று கூறி முடித்த பிறகும் அது தொடர்பான சிந்தனையில் இருந்து விடுபட முடியாமல் அதே விடயம் சம்பந்தமாகப் பேச ஆரம்பித்ததும் "சரி நான் வருகிறேன்" என நண்பர்கள் புறப்பட்டதும் உண்டு, சில நண்பர்களால் "இதுக்கு மேலே இதப் பற்றிப் பேசினே ......! என்று மிரட்டப் பட்டதும் உண்டு.ஆனால் ஒரு நண்பர் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் "இவர் ஒரு விளிம்புநிலை மனிதர்" என்று குறிப்பிட்டதும் இவருக்கு நினைவிருக்கிறதாம்.
எதற்கும் ஒரு அறிவியல் ரீதியான விளக்கத்தைத் தேடுவது அல்லது கூறுவது இவரது பழக்கமாகவே இருந்திருக்கிறது. இவருக்கு ஒரே ஒரு மனக்குறைதான் உள்ளது, அதாவது தன் மகன் விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்ட அந்தத் தந்தை இப்போது உயிரோடு இல்லை. அவருக்குத் தெரியாது அவரது ஆசை நிறைவேறியது என்ற விடயம்.    
(முற்றும்)
அந்திமாலைக்காகத் தொகுத்தவர் . இ.சொ.லிங்கதாசன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக