வியாழன், பிப்ரவரி 10, 2011

கிறிஸ்தோபர் கொலம்பஸ் சாதனையாளனா? கொடியவனா? - அத்தியாயம் 17

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
ஏறக்குறைய 1470 ஆம் ஆண்டளவில் கொலம்பஸ்சிற்கு 19 வயதாக இருக்கையில் அவன் தான் வாழ்ந்த தேசத்தின் கடல் எல்லையைக் காப்பாற்றும் 'கடற்படையில்' சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்கள் 15 வயதைத் தாண்டியிருந்தால் தமது தேசத்தைக் காப்பாற்றுவதற்காக படையில் சேரவேண்டியது அவசியமானதாகும். சில தேசங்களில் இந்த வயதெல்லை 14 என்றோ 16 என்றோ அல்லது 18 என்றோ மாறுபட்டு காணப் பட்டது.


இக்காலப்பகுதியில் கொலம்பஸ் கடற்படையில் மிகவும் சிறப்பாகப் பணிபுரிந்ததால் பல மாலுமிகள், கடலோடிகள், கடல் ஊடாக வாணிபம் செய்கின்ற வணிகர்கள் போன்ற பல தரப்பினருடன் தொடர்புகள் ஏற்படலாயிற்று. அது மட்டுமன்றி நாடுகாண் பயணங்களில் ஈடுபட்டிருந்த, நாடுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அயல்நாடுகளில், இத்தாலிக்கு நட்பு நாடுகளாக விளங்கிய போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளின் இராசப் பிரதிநிதிகள், கடல் வாணிபர்கள் போன்றோருடனும் தொடர்புகளைப் பேணும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே கொலம்பஸ் ஜெனோவா மன்னரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு கடற்படைப் பிரதிநிதி ஆனான். அவனது இருபத்தியிரண்டாவது வயதில் கிரேக்க நாட்டுக்கருகில் இருக்கும் 'ஜெனோவ்' குடியிருப்புகள் அடங்கிய  தீவாகிய 'சியோஸ்'(Chios) எனும் நிலப்பரப்பு கொலம்பஸ்ஸின் பொறுப்பில் விடப்பட்டது.
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக