இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். (548)
பொருள்: மக்கள் தங்கள் குறைகளைச் சொல்வதற்கு நேரில் காணமுடியாதவனாகவும், சரியாக ஆராயாமல் தீர்ப்பு வழங்குபவனாகவும் உள்ள ஆட்சியாளன், பகைவரின்றியே, தானே தாழ்ந்த நிலையடைந்து கெடுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக