வியாழன், ஆகஸ்ட் 18, 2011

வாழ்வியல் குறள் - 8

ஆக்கம்: வேதா இலங்காதிலகம்.
டென்மார்க்.

(திருவள்ளுவர் குறள் போல எனது குறள்)

பொறாமை.

பிறரின் உயர்வால் பெருமையுறும் மனம்
கறளெனும் பொறாமை அற்றது.
பொறாமை துறவாமை பெருங் கேடு
அறவே அதையழித்தல் மேம்பாடு.
வீழ்த்தும் பொறாமையால் சிறப்புறுவது எம்
வாழ்வமைச்சு எனும் அறம்.
ண்பற்ற மனதில் ஆற்றாமை, தாளாமை,
ஏற்காமை பொறாமை ஆகிறது.
ண்புடை மனம் பொறாமை தரும்
மைகளை அறிவால் வெல்கிறது.
பொறுமையெனும் அருமையான குளிர் சாரல்
பொறாமைத் தீயை அணைக்கும்.
தையோ எப்படியோ வெல்வதிலும் உனை
வதைக்கும் பொறாமையை வெல்!
மாறாத நட்பை மனதில் பேணினால்
பொறாமைப் புகை புகையாது.
பொறாமை மானம் வெட்கம், ரோசம் 
பார்க்காது பல்லை இழிக்கும்.
ங்காரம், ஆவேச, அழுக்கு நெய்யில்
ஓங்காரமாய் எரிவது பொறாமை.
ங்கும் மனம், தாங்காத மனம் 
வீங்கிச் சாய்ந்திடும் பொறாமையில்.

4 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தங்கள் குறலும் அழகாக இருக்கிறது...

Vetha.Elangathilakam சொன்னது…

Oh!.....saunder!...Thank you very much. come there also! Thank you Anthimaalai.God bless you all.

vinothiny pathmanathan dk சொன்னது…

very nice

T.Nathan, Denmark சொன்னது…

Very good

கருத்துரையிடுக