7. கர்ப்பவதியாக இருக்கும் தாய்க்கு, போதிய சத்துள்ள உணவுகள் அவசியம் என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம், எந்த அளவுக்கு சத்துள்ள உணவுகள் அத்தியாவசியமானதோ, அதேயளவு கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்கு ஓய்வும், உறக்கமும் அவசியமாகும். ஒரு சாதாரண மனிதன் உறங்கும்போது, அவனது மூளையில் உள்ள பல கலங்கள்(செல்கள்) புதுப்பிக்கப் படுவதோடு, உடலின் ஏனைய பகுதிகளிலுள்ள கலங்கள் பழுது பார்க்கப் படுவதாகவும், இதானால் சராசரியாக உழைக்கின்ற ஒரு மனிதனுக்கு 8 மணித்தியாலங்கள் உறக்கம் அவசியம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். தனது கருவில் ஒரு குழந்தையைச் சுமக்கும் தாயின் விடயத்தில் இது 8 தொடக்கம் 10 மணித்தியாலங்களாக அமைதல் நலம் என்பது மருத்துவ உலகினரின் கணிப்பாகும். நம் ஈழத்தமிழரிடையே ஒரு மரபுவழி நம்பிக்கை நிலவுகிறது, அதாவது "கர்ப்பவதியான தாய் அதிகம் தூங்கினால், கருவிலுள்ள குழந்தையின் தலை பெருத்துவிடும்" இது பிரசவத்தின் போது மிகவும் சிக்கலை

-அடுத்த வாரமும் தொடரும்-
1 கருத்து:
super super
கருத்துரையிடுக