அவுஸ்திரேலியா
முழுப்பெயர்:
அவுஸ்திரேலியப் பொதுநலவாயம்
தலைநகரம்:
கன்பெரா
தென் துருவத்திற்கு அண்மையில்(ஓசியானியா)
நாட்டு எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் கடல்.
வடக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் இந்து சமுத்திரம்.
தெற்கு மற்றும் கிழக்குப் பக்கங்களில் பசுபிக் சமுத்திரம்.
அயல் நாடுகள்:
வடக்கு - இந்தோனேசியா, கிழக்குத் தீமோர், பப்புவா நியூகினியா
வட கிழக்கு - சொலமன் தீவுகள், வனாச்சூ, நியூ கலிடோனியா
தென்கிழக்கு - நியூசிலாந்து
பெரிய நகரம்:
சிட்னி
ஏதுமில்லை
தேசிய மொழி:
ஆங்கிலம்
இனங்கள்:
ஆங்கிலேயர், ஐரிஷ், ஸ்கொட்டிஷ், இத்தாலியர், ஜேர்மன், சீனர், கிரேக்கர்.
சமயங்கள்:
கிறீஸ்தவம், மற்றும் சிறிய அளவில் புத்த மதம், இஸ்லாம், இந்து, யூத சமயம்.
கல்வியறிவு:
99%
ஆயுட்காலம்:
ஆண்கள்: 78.7
பெண்கள்: 83.5
அரசாங்கமுறை:
நாட்டின் அரசி:
இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)
ஆளுநர்:
குவென்டின் பிரைஸ்(Quentin Bryce)
பிரதம மந்திரி:
ஜூலியா கில்லட்(Julia Gillard)
இங்கிலாந்திடமிருந்து சுதந்திரமடைந்த திகதி:
01.01.1901
பரப்பளவு:
சனத்தொகை:
22,555 624(2010 மதிப்பீடு)
நாணயம்:
அவுஸ்திரேலிய டொலர்(AUD)
சர்வதேசத் தொலைபேசி:
00-61
பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
சுற்றுலா, கல்வி, வர்த்தகம்(வட்டிக்குப் பணம் கொடுத்தல்), விவசாயம்.
கனிய வளங்கள்:
நிலக்கரி, தங்கம், வெள்ளி, செப்பு, அலுமினியம், இரும்பு, தகரம், கண்ணாடி மணல், யூரேனியம், பெற்றோலியம், இயற்கை எரிவாயு.
ஏற்றுமதிப்பொருட்கள்:
இயந்திரங்கள், வாகன உதிரிப்பாகங்கள், கணனிப் பொருட்கள், தொலைத் தொடர்புக் கருவிகள், கோதுமை, கம்பளி, இறைச்சி, பாலுணவுகள், பழங்கள், திராட்சை இரசம்(வைன்)
முக்கிய குறிப்பு:
அவுஸ்திரேலியாவில் ஏறக்குறைய முப்பதினாயிரம்(30,000) தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
நாட்டின் பெருமைகள்:
தனிநபர் வருமானம் அதிகமுள்ள(ஆண்டொன்றுக்கு 45,285 அமெரிக்க டொலர்கள்) மிகவும் செல்வச் செழிப்புள்ள நாடுகளுள் ஒன்று.
உலகின் ஆறாவது பெரிய நாடு.
ஒரு நாடு, ஒரு தீவு, ஒரு கண்டம் என மூன்று பெயர்களால் அழைக்கப்படும் பெருமை பெற்றது.
நாட்டின் சிறுமைகள்:
இந்நாடு 17 நூற்றாண்டில் ஐரோப்பியர்களால்(பிரித்தானியர்களால்) கைப்பற்றப் பட்டபோது, அந்நாட்டில் 48,000 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான 'ஆதிவாசிகள்(Aborigines) ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டனர்.
ஐரோப்பியர்கள் இந்நாட்டில் குடியேற்றங்களை ஆரம்பித்தபோது, பிரித்தானியாவில் குற்றச் செயல்களில்(கொலை, களவு, பாலியல் வல்லுறவு) ஈடுபட்ட குற்றவாளிகளே முதன் முதலில் குடியேற்றப் பட்டனர். ஆதலால் இந்நாட்டிற்கு 'குற்றவாளிகளின் தேசம்' என்ற பட்டப் பெயரும் உண்டு.
1 கருத்து:
i like et.
கருத்துரையிடுக