ஞாயிறு, ஜூன் 03, 2012

தலையணையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

சிலருக்கு தலையணையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவதில்லை. என்ன சார் இது? இதுல தெரிஞ்சிகக என்ன இருக்குது அப்படின்னு கேட்காதீங்க. கட்டுரையைப் படித்து முடிக்கும்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. ஓ.கே. தொடர்வோம்.

தலையணையை சரியான அளவிலும் சரியான மிருதுத்தன்மையிலும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் பல பிரச்சினைகளிலிருந்தும் தப்பலாம். நம்புகிறீர்களா?

விலங்குகள் கூட இந்த அறிவைப் பெற்றிருக்கின்றன. தெரியுமா? உதாரணமாக யானைகளை எடுத்துக்கொள்ளுங்கள். காட்டு யானைகளை நான் சொல்லுகிறேன். அவை புற்களை சேகரித்து தலையணையாக பயன்படுத்திக்கொள்கின்றனவாம். ஒட்டகச் சிவிங்கிகள் பெரும்பாலும் நின்று கொண்டேதான் தூங்கும் பழக்கம் கொண்டவை. ஆனாலும் சில நேரங்களில் படுத்தும் ஓய்வெடுக்கும். அப்போதெல்லாம் தனது இடுப்பையே தலையணையாக பயன்படுத்துமாம். 

ஒழுங்கற்ற தன்மை, போதுமான மிருதுத் தன்மை இல்லாத தலையணைகளை பயன்படுத்தினால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. நம்முடைய கழுத்தெலும்பில் குறுக்குப் பட்டைகள் போன்ற எலும்புகள் (cervical vertebrae bones) தட்டு போல காணப்படுகின்றன. 
இந்த எலும்பிலான குறுந்தட்டுகள் இடையே நிறைய இடைவெளிகள் காணப்படுகின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான நரம்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை மூளைக்கும், கைகளுக்கும், தோள்களுக்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் செல்லும் முக்கியமான உணர்கடத்திகளாகும்.

நீங்கள் உங்கள் கழுத்துக்கு போதுமான அளவு ஓய்வை அளித்தீர்களானால் இவை ஒரு பிரச்சினையில்லாமல் இயங்கி உங்கள் தூக்கத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்குகின்றன. அதாவது மெல்லிய ஆனால் உறுத்தாத போதுமான அளவு உயரமான தலையணையைப் பயன்படுத்தும்போது. 

ஆனால் சரியான தலையணையைப் பயன்படுத்தவில்லை என்றால் கழுத்துப் பகுதியிலிருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கழுத்து வலி, தலைவலி, தோள் வலி, கழுத்து அப்படியே நின்று விடுதல் (Stiff Neck) மற்றும் கைகளில் மரத்துப்போய் வாதம் போன்ற நிலைமை ஆகிய விபரீத விளைவுகள் உண்டாகி விடுகின்றன. 

ஓ.கே. அப்படியானால் எப்படி தூங்க வேண்டும் என்கிறீர்களா? சொல்கிறேன். தூங்குவதற்கு சரியான கோணம் எது? கழுத்து, தலை மற்றும் தோள் இவற்றை எந்த கோணத்தில் வைக்க வேண்டும். இதற்கு ஏதேனும் முறை உள்ளதா? நிச்சயம் உள்ளது. 

நமது கழுத்துக்கு கீழே சரியாக 15 டிகிரி கோணத்தில் தலையணை இருக்க வேண்டுமாம். இதுவே மருத்துவர்கள் ஆராய்ச்சிகளின் முடிவாக நமக்கு தெரிவிக்கும் முடிவு. (உடனே போய் காம்பஸ் டப்பாவ எடுத்து அளந்துருங்க மக்காஸ்)

தலையணையின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும்?

நம்முடைய டர்க்கி டவல் இருக்கிறதே அந்த மிருதுத்தன்மையும், அதை நான்காக மடித்து வைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ மேலும் 

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

நல்ல ஆக்கம் .நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

கருத்துரையிடுக