ஞாயிறு, அக்டோபர் 02, 2011

ஆன்மீகம் - 3


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.


சரஸ்வதி துதி.   
ம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்                                                                                              ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஓம்  ஓம் சக்தி ஒம்
சுந்தர வதனி சுகுண மனோகரி மந்தகாசமுடை மதிவதனி
   எனும் ராகத்தில்……)
சிந்து பாடும் அடியார்கள் கரங்கள்
ஏந்தி உன்னைத் தொழுதிடவே
காந்த ஒளியுடை அருள் முகத்தோடு
சிந்திடுவாய் உன் காட்சியினை…..                      ( ஓம் சக்தி ஓம் )
ந்துகளான தேவர்கள், பாணர்கள்
வந்து புடை சூழ அலங்காரமாக
துந்துபி நாதங்கள் ஒலித்திடவே
சுந்தரமாயிங்கு வந்திடுவாய்.                                    (ஓம் சக்தி ஓம்…)
ரமுடை வீணை அணியாக
உரமுடன் வாழ்ந்திட நூலொன்று
கரத்தினில் ஏந்திய மதுரவாணி
பிரம்மவிலாசினி வருவாய் அருள்வாய்.          (ஓம் சக்தி ஓம்…)
லர்ந்த தாமரை ஆசனம்அமர்ந்த
அலர்ந்த முகத்தழகு நாயகி
அறிவின் அரசி அர்ச்சிக்கிறோம்.
அற்புத நாயகி சரணம் சரணம்.                                ( ஓம் சக்தி ஓம்….)
ரஸ்வதி பூசையென்பதால் இசையெடுத்து, யேர்மனிய சிறுமி காயத்திரி சிவநேசன் இலண்டன் தமிழ் வானொலியில் பாடினார் )

2 கருத்துகள்:

Lakshmi Srinivasan, Brunei சொன்னது…

I like it

vetha (kovaikkavi) சொன்னது…

Dear Lakshmi Srinivasan Brunei Thank you so much. God bless you.

கருத்துரையிடுக