வியாழன், செப்டம்பர் 16, 2010

முதல் பரிசு மூன்று கோடி - அத்தியாயம் 1

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன்







இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரமடைந்த காலத்திற்கு முன்பாகவுள்ள காலப்பகுதியில் இலங்கையின் பெரிய நகரங்களில் தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று ஒலிபெருக்கி ஒன்றைக் கட்டிக்கொண்டுலொத்தர் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்திருக்கும். அந்த வாகனத்தில் இருந்து வரும் விளம்பரம் இதுதான் "நாளை மறுதினம் நீங்கள் காரில் செல்லலாம், ஆனால் உங்கள் முதலீடு ஒரு ரூபாய் மட்டுமே". இந்த விளம்பரத்தை கேட்கும் சாதாரண பொது மக்களில் பலரும் "போனால் போகிறது ஒரு ரூபாய் தானே" என்று நினைத்துக்கொண்டு ஒரு லொத்தர் சீட்டை வாங்குவர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு விடயம் நினைவுக்கு வருவதே இல்லை அதாவது தம்மைப்போல் லொத்தர் வாங்குகின்ற பல லட்சம் பேர்களில்(ஆகக் குறைந்தது ஐந்து லட்சம் பேர்கள் ) ஒரே ஒருவருக்கு மட்டுமே 'ஒரு லட்சம் ரூபாய்' பரிசு கிடைக்கப் போகிறது என்பது. சரி அப்படியே நம் புலம்பெயர் சமுதாயத்திற்கு வருவோம், நம்மிலும் ஒரு குறிப்பிட்ட தொகையினர் அடிக்கடி பரிசுச் சீட்டு வாங்குகின்ற வழக்கம் உள்ளவர்கள். இங்கு வெளி நாடுகளில்  இலங்கைஇந்தியப் பரிசுச் சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் பரிசுத் தொகையும், பரிசுச் சீட்டின் விலையும் மிக அதிகம். ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்ற பேராசைநம்மைப் போல் மேற்கத்திய நாட்டவர்களுக்கும் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மைஆனால் அவர்கள் இதனை ஒரு குறைந்த இழப்புள்ள சூதாட்டமாக நினைத்து விளையாடுகிறார்கள்ஆனால் நாமோ பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே முதல் பரிசு என்ற சராசரிக் கணக்கை அறியாமலே முதலீடு செய்து அடிக்கடி தோற்றுப் போகிறோம். இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்த வேளையில் ஒரு டேனிஷ் பொருளியல் நிபுணரின் கூற்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவர் கூறுகிறார் "உங்களுக்கு வருடாந்தம் லொத்தரில் மூவாயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு விழவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்...
(அடுத்தவாரம் தொடரும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக