ஆக்கம் இ.சொ.லிங்கதாசன்
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது
சிங்கப்பூர் |
யாழ்ப்பாணம் |

சரி, சிங்கப்பூரின் பரப்பளவைப் பற்றிப் பார்த்தாயிற்று, சிங்கப்பூரின் சனத்தொகை எவ்வளவு? இவ்வருட சிங்கப்பூர் அரசின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி சிங்கப்பூரில் 50,76,700 (ஐம்பதுலட்சத்து எழுபத்தாறாயிரத்து எழுநூறு) பேர் வாழ்கிறார்கள். இவர்களில் 42 சதவீதத்தினர், வெளிநாட்டவர்களாவர். இந்த நாட்டில் நிலத்திற்கடியில் குடிநீர் கிடையாது, மண்ணில் கிணறு தோண்டினால் கிடைப்பது 'உவர்நீராகும்', அப்படியானால் இந்த ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீருக்கும், தமது நாளாந்தத் தேவைகளுக்கும் தண்ணீருக்கு(நன் நீருக்கு) என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? உங்கள் கேள்விக்கான விடை இதுதான்,
சிங்கப்பூர் மக்கள் பின்வரும் நான்கு வழிமுறைகளில் தமக்குத் தேவையான தண்ணீரைப் பெறுகிறார்கள்:
- தண்ணீரை இறக்குமதி செய்தல்.
- உபயோகிக்கப்பட்ட தண்ணீரைச் சுத்திகரித்துத் திரும்ப உபயோகித்தல்.
- மழைத் தண்ணீரைச் சேமித்து உபயோகித்தல்.
- கடல்நீரைக் குடிநீராக்கி உபயோகித்தல்.
1. தண்ணீரை இறக்குமதி செய்தல்:

சிங்கப்பூர் என்ற சிறிய நாடு பிரித்தானியாவிடமிருந்து 16.9.1963 இல் உத்தியோகபூர்வமாகச் சுதந்திரமடைந்தது. சுதந்திரத்தின் பின்னர் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் மலேசியக் கூட்டமைப்பில்(கூட்டிணைவில்) ஒரு மாநிலமாக இணைந்திருந்தது. அதன் பின் மலேசியக் கூட்டமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 9.8.1965 இல் மலேசியாவை விட்டுப் பிரிந்து சுதந்திர நாடாகியது. இந்நாடு மலேசியாவுடன் சேர்த்து பிரித்தானியர்களால் ஆளப் பட்டபோதும், மலேசியக் கூட்டமைப்பில் ஒரு ஒன்றியமாக(மாநிலமாக) இருந்தபோதும் மலேசியாவிடமிருந்து 'இராட்சதக் குழாய்கள்' மூலமாகவும், மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் இருக்கும் சுமார் 1 கிலோமீட்டர் தூரமுள்ள பாதை வழியாக...
அடுத்த வாரமும் தொடரும்
1 கருத்து:
verry good
கருத்துரையிடுக