புதன், நவம்பர் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (905)

பொருள்: தன் மனைவிக்கு அஞ்சி வாழ்பவன் எப்போதும் நல்லவர்க்கு நல்ல செயல் செய்வதற்கு அஞ்சுவான்.

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்

கீதையின் புகழ் 

நில மகளே கேள்!
எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு விரைவாக அமைதியும், நட்பும் உருவாகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ, ஓதப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ, அடுத்தவர் வாசிக்கும் தருணத்தில் காதால் கேட்கப்படுகிறதோ அங்கு நிச்சயமாக நான் வாசம் செய்கிறேன்(வசிக்கிறேன்).

செவ்வாய், நவம்பர் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


மனையாளை அஞ்சும் மறுமைஇ லாளன் 
வினையாண்மை வீறுஎய்தல் இன்று. (904)

பொருள்: தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற(வாழ்கின்ற) மறுமைப் பயன் இல்லாதவனுக்குச் செயலாற்றும் தன்மை சிறப்பாக இராது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இறைவனால் கொடுக்கப் பட்டதை மனிதனால் தடுக்க முடியாது. இறைவனால் தடுக்கப்பட்டதை மனிதனால் கொடுக்க முடியாது. ஆகவே எல்லாம் இறைவன் செயல். 

திங்கள், நவம்பர் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். (903)

பொருள்: மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை, நல்லோரிடை செல்லும் காலம் தவிர்ந்த மற்றைய காலம் முழுதும் நாணத்தையே தரும்.

இன்றைய சிந்தனைக்கு

மகாத்மா காந்தி

உலகில் உங்களால் திருத்தக் கூடிய நபர் நீங்கள் மட்டுமே. வேறு எவரையும் திருத்தும் முயற்சியில் வீணாக நேரத்தைச் செலவு செய்ய வேண்டாம். மாற்றங்கள் என்பது முதலில் எம்மிடமே ஏற்பட வேண்டும். உலகில் நாம் காண விரும்பும் மாற்றம் நாமாகத்தான் இருக்க முடியும்.

ஞாயிறு, நவம்பர் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதுஓர் 
நாணாக நாணுத் தரும். (902)

பொருள்: தன் ஆண்மையை விட்டு, மனையாளது பெண்மையை விரும்புகிறவனது செல்வம், ஆண்பாலார்க்கு நாணத்தைக் கொடுக்கும்.