ஞாயிறு, அக்டோபர் 21, 2012

மரண அறிவித்தல்

இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவு 6 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டிருந்து, இலக்கம் 20 பிரப்பங்குளம் வீதி, வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தைத் தற்காலிக முகவரியாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லையா கமலாம்பிகை அவர்கள் நேற்றைய தினம் (20.10.2012) சனிக்கிழமை காலமானார்.
திருமதி .செல்லையா கமலாம்பிகை
தோற்றம்: 02.11.1927
மறைவு: 20.10.2012



அன்னார் காலஞ்சென்ற வைரவநாதன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றசின்னக்குட்டி(வெள்ளையர்) மருதடியாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற யோகம்மா, காலஞ்சென்ற முத்துலட்சுமி, காலஞ்சென்ற இரத்தினவிநாயகம், காலஞ்சென்ற ராசசேகரம், காலஞ்சென்ற பரஞ்சோதி, மற்றும் படிகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மங்களநாயகி, சுந்தரநாயகி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயாரும், மதியாபரணம், மகாதேவா, புவிமலர்தேவி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(22.10.2012 திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு  இலக்கம் 20  பிரப்பங்குளம் வீதி, வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக யாழ்/கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: செல்லையா நாகரத்தினம் (மகன்)
தொடர்புகளுக்கு:

செ.நாகரத்தினம் (மகன்) 0094-774 448 760
திருமதி சுந்தரநாயகி மகாதேவா (மகள்) 0094 -778 996 670 

8 கருத்துகள்:

Paransothinathan சொன்னது…

எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thiraviam Family சொன்னது…

எங்கள் குடும்பமும் உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

Rajagopalan Sinnathambi, Denmark சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Sri Karan, U.K சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Seetha, Netherlands சொன்னது…

அன்பான மாமி எங்களை அன்போடு வரவேற்று அன்பாக அமுது தருவிங்களே, மாமி எங்கு ஓடி மறைந்திர்கள்? என்றும் என் நினைவில் நிங்கள் தந்த அன்பு மறவாது.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

Vetha ELangathilakam, Denmark சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் (I know this vali.....)..

Mandaitivu Magan, Sri Lanka சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Shan Subramaniyam, Denmark சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துரையிடுக