சனி, அக்டோபர் 27, 2018

இன்று நள்ளிரவில் நேர மாற்றம் மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (28.10.2018)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள்அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு)நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர்அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது. 
அமெரிக்கக் கண்டத்தில்(கனடா உட்பட) இந்த நேர மாற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி(04.11.2018) நள்ளிரவில் நடைபெற இருப்பதும் ,  

அவுஸ்திரேலியாவில்(ஆஸ்திரேலியா) இந்த நேர மாற்றம் கடந்த 07.10.2018 அன்று இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்கது
அன்புடன் 
-நிர்வாகி- 
அந்திமாலை இணையம் 
டென்மார்க் 

புதன், அக்டோபர் 17, 2018

மரண அறிவித்தல்

தோற்றம்: 11.03.1952
மறைவு: 16.10.2018
திரு. ஆறுமுகம் சந்திரசேகரன் ( 'பஸ் டிரைவர் சந்திரன்' )
தோற்றம்: 11.03.1952
மறைவு: 16.10.2018
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து 'Leeuwarden' நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ஆறுமுகம் சந்திரசேகரன் ( 'பஸ் டிரைவர் சந்திரன்' ) அவர்கள் நேற்றைய தினம் (16.10.2018) நெதர்லாந்தில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம், சிவபாக்கியம்(மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான செல்லத்தம்பி ( 'பொன்னுத்துரை' ), நாகம்மா (மண்டைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும், சீதா தேவியின்(நெதர்லாந்து) அன்புக் கணவரும், காலம் சென்ற மகேந்திரன், வரலட்சுமி (மண்டைதீவு), குணபாலசிங்கம் 
( 'குணம்', நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மீனலோஜினி ( 'மீனா', ஃபிரான்ஸ்) பிரதாப் ( 'பிரபு', ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், பிரபாகரன் ('பிரபா' ஃபிரான்ஸ்) லொறின் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவகுமார் ( 'உதயன்', ஜெர்மனி), கெளரிமாலா ('கெளரி', லண்டன், ஐக்கிய இராச்சியம்), வசந்தமலர் ( ஆனந்தி ) - 'அபிவிருத்தி உத்தியோகத்தர்', நல்லூர் பிரதேச செயலகம்; இலங்கை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, காலஞ்சென்ற வின்சன், புவனேஸ்வரி (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், லலீந்திரா (ஜெர்மனி), சோமசுந்தரம் / சுந்தர் (லண்டன், ஐக்கிய இராச்சியம்), சத்தியசீலன் / சீலன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும், பிரியங்கா, பிரித்திகா, பிரவீன், பிரஜித், லொனொக்ஸ்சிவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நெதர்லாந்தில் எதிர்வரும் 23.10.2018  செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 14:00 மணி தொடக்கம் மாலை 16:30 மணி வரை Haskerpoarte 2 , 8465 HP Oudehaske, Holland என்ற முகவரியில் நடைபெறும். உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள், முகநூல் நட்புகள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

பூதவுடல் பார்வைக்கு பின் வரும் முகவரியில்:
Noorderhof Uitvaartcentrum 
Sem Dresden Straat 6
8915 Bz Leeuwarden 
Holland

தகவல்: பி.மீனலோஜினி (மகள்)

தொடர்புகளுக்கு: 
சீதாதேவி (மனைவி) - 0031 - 615 262 070
மீனலோஜினி (மகள்) - 0031 - 617 635 455

பிரதாப் (மகன்) - 0049 - 1749 0591 99
பிரபாகரன் (மருமகன்) - 0033 - 651 723 375
வரலட்சுமி (சகோதரி) - 0094 - 779 737 381