செவ்வாய், டிசம்பர் 25, 2018

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்


தேவகுமாரன் பிறப்புக் கவிதை



புவியை மீட்க வந்த பாலன்


சீதளக் காற்று வீசிய - ஓர் புது இரவினிலே 
சீர் வந்தது உலகுக்குப் புதுச் சீர் வந்தது - அது 
மாதிளங்கன்னி மரியாள் வயிற்றுப் பொன் முத்து 
மனுக்குலம் மீட்க வந்த இறையின் சொத்து.

கோடி வெள்ளி சேர்ந்தவொளி சிந்திச் சிரித்தது - புவி மாந்தர் இனி மீள்வரென சிறிய விழி மலர்ந்தது.
நாடியிறை நமக்களித்த நற்செய்தி வாய்திறந்து 
தாயணைப்பில் செவி குளிர இருள் விடியத் தானழுதது.
அழுத முகம் சிரிக்கையிலே புனிதமெங்கும் தெறித்தது 
பிறந்த பாலன் யேசுவை உலகமின்றும் போற்றுது
சிலுவையிலே துயர் சுமந்து மரித்த பின்னும் உயிர்த்தெழுந்து 

இறையரசை நிறுவவந்த புனிதபாலன் வாழ்கவே. 
   

-ஆக்கம்-
ஈழக்கவிஞன் 
இரா.கெளரிநாதன்