சனி, மார்ச் 28, 2015

இன்று நேரமாற்றம். மறக்க வேண்டாம்!

இன்றைய தினம் 28.03.2015 சனிக் கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 29.03.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை)  ஐரோப்பாவில்  'நேரமாற்றம்' நிகழ்கிறது  என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00 மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்போர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல் சாலச் சிறந்தது. 
ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 08.03.2015 அன்று நிகழ்ந்தமையும், 

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 05.04.2014 அன்று குளிர்கால நேர மாற்றம் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத் தக்கது ஆகும்.



ஆசிரியபீடம் 
அந்திமாலை