திங்கள், ஜூன் 15, 2015

அறிவையாளும் யுக்தி


அறிவையாளும் யுக்தி அவன் தான் ஷோபாசக்தி! 
 

அல்லையூர் பெற்றெடுத்த அரிய மைந்தனே!
அவனியெலாம் புகழ் மணக்கும் எழுதுகோல் வேந்தனே!
பல்கலையும் நடமாடும் ஷோபா நீவாழ்க
பாக்களாலும் பூக்களாலும் உன் புகழை வாழ்த்தினேன் 

சிந்தையெல்லாம் இனிக்கின்ற செந்தமிழின் தேனாறே
எந்நிலையும் எடுத்தியம்பும் முந்து குரலொலியே
குந்தியிருந்து உந்தன் படைப்பை  

சிந்தைக்கு ஏற்றுதல் நமக்கன்றோ பெருமை
இயல் இசை நாடகம் உன் கைவந்த கலை
அதைத்தவிர  உனக்கு ஊரில் என்ன வேலை?
எமக்குத் தெரிந்த அன்று 
தெருப்புலவன், சுவர்க்கவிஞன்
இன்றோ புலத்தில்  குடிபெயர்ந்து
அருந்தமிழ் அன்னையின் ஆற்றல்மிகு பிள்ளையாய் 

அவதாரம் எடுத்தான் சிறந்து - எம்
மனக்கண்ணில் காண்கிறோம் வியந்து.

'தீபன்' ஒளிப்படத்தில் தீபமாய் ஒளிர்ந்தாய்
திறமையெனும் பாதையில் தீர்க்கமாய் நடந்தாய்
விருதுகள் பலபெற்று விவேகியாய் நிமிர்ந்தாய்
உலகம் வியந்திடக்  கலைஞனாய் உயர்ந்தாய்

பூந்தமிழ் மனமெல்லாம் பூத்திருந்து வாழ்க
ஏந்து புகழ்மோகனமாய் என்றென்றும் வாழ்க
மாந்தர்கள் வாழ்த்துகின்ற அறிஞனாய் வாழ்க
நீந்துகின்ற உயர் அறிவில் நீடு வாழ்க.


ஆக்கம் 'கவி வித்தகர்' பாலன் சேவியர்,
அல்லைப்பிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை