ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்
பார்தாக்கப் பக்கு விடும். (1068)
 
பொருள்: வறுமைக் கடலைக் கடக்க ஒருவன் கையில் எடுத்துக்கொண்ட கீழான செய்கையாகிய 'இரத்தல்'(பிச்சை எடுத்தல்) என்பது காவல் இல்லாத படகு போன்றது. அதன் வழியில் செல்லும்போது செல்வந்தர்கள் தமது சொத்தை 'மறைத்தல்' என்னும் பாறை தாக்குமாயின் படகு பிளந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக