புதன், ஏப்ரல் 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 108 கயமை

மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன 
ஒப்பாரி யாம்கண்டது இல். (1071)

பொருள்: கயவர்கள் உருவத்தால் முழுக்க, முழுக்க நன் மக்களைப் போலவே இருப்பர். ஆனால் குணத்தால் அவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். இந்த பிரித்தறிய முடியாத கடினமான ஒற்றுமை மனிதர் தவிர்ந்த வேறு எந்தப் பொருள்களிலும் நாம் கண்டதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக