செவ்வாய், ஏப்ரல் 29, 2014

இன்றைய சிந்தனைக்கு

பகவத் கீதை 

இயற்கையில் 'படைப்பு' மட்டும் அடங்கியுள்ளது என்று எண்ணாதே. இயற்கையின் படைப்பில் மூன்று தொழில்களும் அடங்கியுள்ளன என்பதை உணர்ந்து கொள். ஓர் இடத்தில் 'சூரியோதயம்' என்றால் மற்றோர் இடத்தில் 'சூரிய அஸ்தமனம்'. ஓர் இடத்தில் உயிர் ஒன்று பிறக்கிறது என்றால் மற்றொரு இடத்தில் உயிர் ஒன்று இறக்கிறது. உடலை உண்டு பண்ணுதல் என்றால் 'உணவை அழித்தல்' என்று பொருள்படுகிறது. ஓயாது புதிய உயிர்கள் பிறந்துகொண்டிருக்கிற இதே பூமியில்தான் பழைய உயிர்களும் மாறி மாறி மடிந்துகொண்டும் இருக்கின்றன. படைப்புக்கும், அழிப்புக்கும் இடைப்பட்ட நிலை 'ஸ்திதி' என்று அழைக்கப் படும். ஆகவே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய 'முச்செயலும்' முக்கோணம் போன்று ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. மரணத்தை தெளிவாக அறிந்து கொண்டால் மற்ற இரண்டையும் எளிதில் அறிந்து கொள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக