சனி, ஜனவரி 18, 2014

சர்க்கரை நோயாளிகள் உணவு பழக்க வழக்கம் என்ன?

சர்க்கரை நோயாளிகள் மிகவும் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது உணவு பழக்க வழக்கமே ஆகும். இது சித்தர்களால் நீண்ட நெடுங்காலமாகவே வலியுறுத்தப்பட்ட கருத்தாகும். 

உணவில் ஒரு ஒழுங்கையும் நெறிமுறையையும் கடைப்பிடிப்பதன் மூலமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நல்ல முறையில் சீராக வைத்திருக்க முடியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறையாமலும், அதிகரிக்காமலும் சரியான அளவில் வைத்திருப்பதன் மூலம் எளிதாக ஆரோக்கியத்தைப் பேண இயலும். 

உணவில் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை சர்க்கரை நோயுள்ளவர்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதைக் கடைப்பிடிப்பதன் மூலமே நீங்கள் தினமும் மகிழ்ச்சியாக இருக்கலாம், தேவைப்பட்டால் உடல் எடையை குறைக்கலாம். 

இருதய நோய்கள், ஏனைய சர்க்கரை நோயை ஒட்டி வரும் நோய்களையும் எளிதில் தவிர்க்க முடியும். உணவை ஒரே வேளை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

காலைச் சிற்றுண்டி சுமார் காலை 8.00 முதல் 9.00 மணிக்குள்ளும், பின் சிறிது அவித்த சுண்டல் போன்றவை சுமார் 11.00 மணிக்கும், மதிய உணவு 1 மணி முதல் 2 மணிக்குள்ளும் மாலையில் 1 கப் டீ மற்றும் அவித்த பயறு அல்லது 

சர்க்கரை இல்லாத பிஸ்கட் போன்றவை மற்றும் இரவு 8 மணிக்கு இரவு உணவும் எடுத்துக் கொள்வது உத்தமம். ஒவ்வொருவரும் தங்களது வேலைக்கு ஏற்ப உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 
நன்றி: amarkkalam.net

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வாசித்தேன். மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

கருத்துரையிடுக