புதன், ஜனவரி 15, 2014

லண்டனில் விமானத்தை மறித்த பறக்கும்தட்டு

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு மேற்கே பெர்க்‌ஷைர் பகுதிக்கு மேலே 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்த சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.
ufos_over_londonஉடனே அந்த விமானி, லண்டன் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பரபரப்படைந்த லண்டன் விமான நிர்வாகம் அதுகுறித்து ஆராய்ந்து வருகிறது. இருந்தும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மறைமுக பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக