வியாழன், ஜனவரி 23, 2014

ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டுள்ள முழு நீளத் தமிழ்த் திரைப்படம்.

டியூப் தமிழ்’ மற்றும் ‘கிரியேட்டிவ் சிட்டி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில் வெகு விரைவில் 'உயிர்வரை இனித்தாய்' எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. முழுக்க, முழுக்கப் புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப் பட்டுள்ள இத்திரைப்படத்திற்குப் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக் காணப்படுகிறது. மேற்படி திரைப்படத்திற்கு டென்மார்க்கில் வாழும் கலைஞராகிய 'நடிக வினோதன் த.யோகராஜா அவர்களும், 'அந்திமாலையின் ஆசிரியர்' அவர்களும் வழங்கிய வாழ்த்துச் செய்திகளை உங்களுக்காகத் தருகிறோம்.

 கீழ்க்காணும் வீடியோ இணைப்பில் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளைக் காணலாம்.




டென்மார்க்கின் இரு முக்கிய கலைஞர்களின் கருத்துரைகள்..

yogaமூத்த கலைஞர் நடிகவினோதன் த.யோகராஜா அவர்களின் வாழ்த்துரை..
எனது நெருங்கிய நண்பன் கே.எஸ்.துரை அவர்களின் படைப்பான “உயிர்வரை இனித்தாய்” என்ற திரைப்படம் வெகுவிரைவில் திரைக்குவர இருக்கிறது.
ஈழத்திலிருந்து இன்றுவரை இருவரும் ஒன்றாகக் கலையில் பயணித்து வருகிறோம்.

அவருடைய படைப்புக்கள் தரமானவை என்பதை நான் நன்கு அறிவேன்.
இத்திரைப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித்தரும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள் எல்லோரையும் நான் நன்கு அறிவேன்.
கதாநாயகன் வஸந்த்,தனது ஏழாவது வயதிலேயே ,நான் நடித்ததை எனக்கே நடித்துக் காட்டியவன்.

இவன் முன்னணி நடிகனாக வருவான், என்று அன்றே எனக்குத் தெரியும், கலையின்மேல் இவன் வைத்திருக்கும் பற்று இவனைக் காப்பாற்றும்.
இத்திரைப் படத்திற்கு இன்னுமொரு சிறப்பு,என் தம்பிமார் இருவர் இதில் நடித்திருப்பது.

சின்னக்குட்டி தயநிதி,இரா.குணபாலன் இவர்களைப் பற்றி நான் எடுத்துரைப்பது,பூக்கடைக்கு விளம்பரம் செய்வதுபோல் ஆகிவிடும்.
புலம்பெயர் நாடுகளில் பேசப்படுகின்ற திறன்சார் கலைஞர்கள் இவர்கள்.
இந்திய நடிகர்களுக்கீடாக... மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக