செவ்வாய், ஜூன் 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


கண்ணுடையார் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு
புண்ணுடையார் கல்லா தவர். (393)

பொருள்: கல்வி கற்றாரே உண்மையில் கண்களையுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுவர். கல்லாதவர்கள் முகத்தில் புண்கள் இரண்டு உடையவராக இழித்துக் கூறப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக