புதன், ஜூன் 27, 2012

மரண சிந்தனைகள்

மரணம் என்றால் என்ன? உடலை விட்டு உயிர் பிரிவதா? அதுதான் மரணமா?

ஒருவகையில் மரணம் என்பது உடலை விட்டு இந்த உயிர் பிரிவதுதான். ஏன் உடலைவிட்டு இந்த உயிர் பிரிகிறது? இந்த உடல் தான் வாழ தகுதியில்லை என்று உயிர் கருதுகிறபோது இந்த உடலை துறக்கத் தீர்மானிக்கிறது. அதைத்தான் மரணம் என்கிறோம்.

சரி. இது மட்டும்தான் மரணமா? இல்லை. நிறைய மரணங்கள் வாழ்க்கையில் உண்டு. ஒரு குழந்தை பிறக்கும்போது அது தூய்மையாய் இருக்கிறது. நம் இதயத்தில் உள்ள உயிரில் பல உள்ளுயிர்கள் உள்ளன. நாம் வளர வளர அத்தனை உள்ளுயிர்களும் இந்த பேருயிருக்குள் வளரத்துவங்குகின்றன. இந்த உள்ளுயிர்களை நாம் குணங்கள் என்றும் பேரிட்டு அழைக்கிறோம். 

இவற்றின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. கடவுள் ஒருவரே இவ்வுயிர்கள் கணக்கில் வைக்க முடியும். இவற்றை ஒரு மனிதன் எப்படி பயன்படுத்துகிறானோ அவ்விதமாகவே அவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறுகிறான். 

குழந்தையானது வளரும்போது தாய்ப்பாலுக்காக தாயை ஏமாற்றுகிறது பாருங்கள். அங்கே நிகழ்கிறது முதல் உள்ளுயிரின் மரணம். பள்ளியில் படிக்கும்போது, விளையாடும்போது பொய் சொல்கிறது பாருங்கள். அங்கே நிகழ்கிறது அடுத்த மரணம். 

களவு செய்யும்போது அடுத்த மரணம் நிகழ்கிறது. அடுத்தவர் பொருளை இச்சிக்கும்போது அடுத்த மரணம். வளர்ந்து வாலிபனான பிறகு முறையற்ற காதல், காமம் என்று சீரழிகிறது பாருங்கள். அப்போது நிகழ்கிறது அடுத்த மரணம். 

இப்படியாக மரணம் மரணம் மரணம் என்று நமக்குள் மரணங்களே நிகழ்ந்து கொண்டு இருப்பதால் நமக்குள் உள்ள அந்த தீய மனிதனே வளர்ந்துதான் இன்று பேயாட்டம் ஆடுகிறான். கடைசியில் இந்தப் பேருயிர் உடலை விட்டுப் பிரிந்து விடுகிறது. 

மாறாக சிறு வயதிலிருந்தே முறையாக நல்லொழுக்கங்களை பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்கும்போது நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் (உள்ளுயிர்கள்) வளர்ந்து பெரியவராகும்போது நமக்குள் இருக்கும் அந்த நல்ல மனிதன் வளர்ந்து நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம் சமுதாயத்துக்கும் நம் நாட்டிற்கும் ஏன் இந்த முழு உலகத்துக்குமே பயன்தரும் அற்புதமான மனிதனாகிறான். பூரண ஆயுள் எனும் கட்டிடத்துக்கு நல்ல குணங்களே அஸ்திபாரங்களாகும். 

ஜீவனுள்ளவனாவதும் மரணவாசனையுடையவனாய் மாறுவதும் நம் கையில்தான் இருக்கிறது. 

இறப்பிற்காக நாம் அழ வேண்டுமா? நிச்சயம் வேண்டும். நெருங்கியவர் பிரிந்தால் நெஞ்சம் தாங்குமா? 

பட்டினத்தார் என்ன சொல்கிறார் தெரியுமா?

“அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் கடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையம் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதிரு என்ஏழை நெஞ்சே!”

இதே பட்டினத்தார்தான் தன் தாய் மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக