வியாழன், ஜூன் 14, 2012

ஆரோக்கியம் காக்கும் பூண்டு

* பூண்டை அரைத்து, சருமத்தில் ஏற்படும் கட்டிகள் மீது பற்றுப் போல் போட்டால், கெட்டியாக உள்ள கட்டிகள் நாளடைவில் இளகிப் பழுத்து உடையும்.

* வெள்ளைப் பூண்டை அதே அளவு வெற்றிலை சேர்த்து நைய அரைத்து, இரவு படுக்கப் போகும்போது தேமல் உள்ள பகுதிகளில் பூசி, காலையில் குளித்தால் சில நாட்களில் தேமல் மறையும். மேலும் தோன்றாமலும் இருக்கும்.

* பெண்கள் பிரசவித்தவுடன், வேலிபருத்தி இலை, சுக்கு, பூண்டு, மிளகு ஆகிய ஒவ்வொன்றையும் 5 கிராம் அளவு எடுத்து இடித்து நீரில் போட்டு குடிநீர் போல ஆக்க வேண்டும். அதை மூன்று நாட்கள் பருகி வந்தால் கருப்பை அழுக்கு நீங்குவதுடன், சுருங்கவும் செய்யும்.

* சிலருக்குப் பித்தப் பையில் பித்தம் அதிகமாகி, குமட்டல், வாந்தி போன்றவை உண்டாகும். பூண்டுச் சாறு 15 மி.லி., இஞ்சிச் சாறு 15 மி.லி., தேன் 15 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு அடிக்கடி சுவைத்துக் குடித்தால் பித்த வாந்தி நிற்கும்.
* சில பூண்டுப் பற்களை மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக