வெள்ளி, ஜனவரி 27, 2012

வாழ்வியல் குறள் -18

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


செயல் உறுதி

ஞ்சலாடும் மனமும், உடைந்த மனமும்
உறுதியான செயலை உருவாக்காது.
ன உறுதியும், மனத் துணிவுமே
செயலின் உறுதிக்கு உரம்.
ட்டிடத்திற்கு அத்திவாரம் போன்று நல்ல
திட்டமிடல் செயலை உறுதியாக்கும்
டம், பொருள், ஏவல், காலம்
அறிந்த செயலே உறுதியாகும்.
டலுறுதியால் மனவுறுதி, செயலுறுதிக்கு
இயல்பாகக் கடத்தப் படுகிறது.
முயல் போன்று வேகம் இல்லாவிடிலும்
செயலுறுதி சாதனைக்கு உயர்த்தும்.
ன்னம்பிக்கை கொண்ட செயலுறுதியின் ஆதாரத்திற்கு
நம்பிக்கை ஏணி துணை.
நேர்மை ஒரு கர்ம சிரத்தையான
செயலிற்கு உறுதி தரும்.
நேர்மையற்ற செயலைச் செய்யும் போது
கூர்மையான மனவுறுதி வழுகிடும்.
கூட்டுறவும் ஒருவிதமாக வீரிய செயலுறுதிக்குக்
காட்டுகிறது தன் பங்கை.
சொல் வேறு செயல் வேறென்றால்
செயல் உறுதி குறையும்.
சொற் பந்தலுரம் போன்று உறுதியான
செயற் பந்தலும் தேவை.

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

கருத்துக்கள் அருமை!
வாழ்த்துக்கள்!

சா இராமாநுசம்

Harish N, India சொன்னது…

அருமை..

Paransothinathan சொன்னது…

மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

vetha (kovaikkavi) சொன்னது…

புலவரய்யாவிற்கும், மற்றைய இரு அன்புள்ளங்களிற்கும், அந்திமாலைக்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் இறை அருள் கிட்டட்டும்.

vinothiny pathmanathan dk சொன்னது…

கருத்துக்கள் சிறப்பாக உள்ளது.

Iniya சொன்னது…

நல்ல கருத்துக்கள் அருமை ....!

கருத்துரையிடுக