திங்கள், ஜனவரி 02, 2012

வெற்றியுடன் வருவாய்!….


ஆக்கம் வேதா இலங்காதிலகம், டென்மார்க்

(இரவு பிறந்த புது வருட மினுமினுப்பும் கலகலப்பும் குறையவில்லையே!.. 2006 சுனாமி – துன்பத்தோடு வந்த போது எழுதிய ஒரு கவிதையைச் சுவையுங்களேன்!…2012 என்று கருதியபடி…..)


சுற்றிச் சுழன்று தினங்கள் வளர்ந்து

முற்றுப் பெற்றது ஒரு ஆண்டு.

மற்றுமொரு ஆண்டு இரண்டாயிரத்து ஆறென
மறு வேடத்தோடு புதிதாக எம்மருகில்.
இரண்டாயிரத்து ஐந்தே நன்றி உனக்கு!
இரண்டாயிரத்து ஆறே வளமோடு வருக!
திரண்ட அமைதியும் திருவும் தருவாய்!
வரண்ட மனங்களில் செழிப்புத் தாருவாய்!

பூமியின் சுழற்சியிற்  புது ஆண்டு

நாமினி நல்லதை எதிர் கொண்டு

நிமிர்ந்து வரவேற்போம் நினைத்தது நடந்திட,
நிலையான ஆனந்தம் நிரந்தரமாய் நிலைத்திட.
அப்படி அமையுமா! இப்படி அமையுமா! 
எப்படி அமையும் இந்த ஆண்டு!
ஊர் கெடுப்பாயா! பேர் தருவாயா!
ஓர் இடம் கால ஏட்டிலே எடுப்பாயா!

னமதைக் காத்திட இளம் தென்றலாய்

மனதில் திடமதை ஏந்திக் கொண்டு

கனமில்லா வாழ்வு புதுச் சுவடாக
கணக்குடன் வருவாயா புதுத் திட்டமோடு!
நெற்றியடியாய்  நம் அனைவருக்கும்
நேற்றைய ஆண்டு தந்த பரிசு
சுற்றிச் சுழன்ற சுனாமி இழப்பு
வெற்றியைப் பறித்து வேதனையாக்கியது.

சுற்றி விழுந்த உடலங்களால் தூர்

வற்றி விடுகிறது நம்பிக்கை நீர்.

பற்றி எரிகிறது மனமாயினும் புத்தாண்டே!
வெற்றியுடன் தொடர்ந்து வருவாய் என்போம்.
சாதகமாய் வரவேற்கிறோம் சாதனைகளை நோக்கி
பாதகம் செய்திடாதே சுனாமியால் தாக்கி!
தீதகு எண்ணமின்றித் தொடர்கிறோம் நன்மையாய்
தோதான ஆண்டாய் வெற்றியுடன் தொடர்வாய்!

3 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

அருமை

Harish N, India சொன்னது…

Your poems is very good. I like it.

பெயரில்லா சொன்னது…

Thank you very much Anthimaalai, Vijitha Kamal, sasikala,and Harish N India. And a very happy new year to all.God bless you all.

கருத்துரையிடுக