வியாழன், ஜனவரி 05, 2012

நன்றி, நன்றி, நன்றி.


அந்திமாலையில் வாசகர் வருகை
 30,000 தைத் தாண்டியது.


எமது பேரன்பிற்குப் பாத்திரமான வாசகப் பெருமக்களே!
எமது அந்திமாலையின் உதயம்பற்றி முறைப்படி மின்னஞ்சல் ஊடாகவும், 'முகப் புத்தகம்' (facebook) ஊடாகவும், ஒரு சில அன்பு உள்ளங்களுக்குக் கடிதமூலமாகவும் அறிவித்தல் கொடுக்க ஆரம்பித்த 02.09.2010 தேதி தொடக்கம் இன்றைய தினம் (05.01.2012) வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணிவரை 'அந்திமாலை' இணையத்தளத்திற்கு வருகைதந்த வாசகர்களின் மொத்த எண்ணிக்கை 30,004 ஆகியது. இவ்விணையமானது ஒரு ஆத்ம திருப்திக்காகவும், பொழுதுபோக்கிற்காகவுமே எம்மால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாகவே நாம் 'தினசரிச் செய்திகளை' வெளியிடுவதில்லை. உலகில் தினசரிச் செய்திகளை வெளியிடுகின்ற சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இணையத் தளங்களும், தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சேர்ந்த தனி மனிதர்களால், நேரம் கிடைக்கும்போது பதிவேற்றம் செய்யப்படும் நாற்பதினாயிரத்திற்கு  மேற்பட்ட தமிழ் வலைப் பதிவுகளும் உள்ளன என்பதை உங்களில் சிலரேனும் அறிவீர்கள். மொத்தமாக நாற்பத்திரெண்டாயிரத்திற்கு  மேற்பட்ட இணையங்களோடு போட்டியிட்டு இணைய உலகில் கால் பதிக்க வேண்டிய ஒரு கடினமான சூழலில் 'அந்திமாலை' பிறப்பெடுத்தது. இருப்பினும் எமது அன்பு வாசகர்களாகிய உங்களது ஆதரவால் ஒரு வருடத்தைத்  தாண்டியும் அந்திமாலை ஒரு சிறிய இணையமாக உங்கள்முன் பவனி வருகிறது. ஏறத்தாழ பதினைந்து மாத காலத்திற்குள் வாசகர் வருகைப்பதிவேட்டைத் தமது வருகையால் நிரப்பி, வரவு எண்ணிக்கையை முப்பதினாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்' என்ற சிறப்பான நிலைக்குக்  கொண்டுவந்திருக்கும் எமது அன்பு வாசகப் பெருமக்களை 'அந்திமாலை' இருகரம்கூப்பி வணங்குகிறது.
வளர்ச்சிப்பாதையில் முப்பதாவது அடியை எடுத்து வைத்திருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய இணையத் தளத்திற்கு நீங்கள் கொடுக்கும் பேராதரவிற்கு உளமார்ந்த நன்றிகள். உங்கள் பேராதரவு இன்றுபோல் என்றும் தொடரும் என்று உளமார நம்புகிறோம்.
இந்த மனம் மகிழும் இனிய தருணத்தில் எமக்கு ஆக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய, வழங்கிவருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களையும் நன்றியோடு வணங்குகிறோம். அதேபோல் எங்கள் சோர்வை அகற்றிப் புத்துணர்ச்சியோடு எம்மைச் செயற்படத் தூண்டும் உங்கள் அனைவரது வருகைக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து எமது தளத்திற்கு வருகை தருவதோடு, கருத்துரைகள் இட்டு எம்மையும், எமது படைப்பாளிகளையும் ஊக்குவிக்கின்ற வாசகர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகுக. அதேபோல் எம்மைத் தொடர்ந்தும் உற்சாகப்படுத்திய, ஊக்குவிக்கின்ற அத்தனை நல் இதயங்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகுக.   என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.
வாருங்கள்! ஒன்றுபட்டு உயர்வோம்.


நன்றியுணர்வுடன் 
அந்திமாலையின் சார்பாக,
இ.சொ. லிங்கதாசன்

4 கருத்துகள்:

Hotlinksin.com சொன்னது…

நண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

துரைடேனியல் சொன்னது…

Vaalthukkal Sago.

vetha (kovaikkavi) சொன்னது…

good .vaalthukal.

vetha (kovaikkavi) சொன்னது…

we are in the samme boat - 32�406 untill today I got 32�406 visitters.( one year and6 monthes.)
congrats again.....

கருத்துரையிடுக