ஞாயிறு, ஜனவரி 13, 2013

மூளையைக் காப்பாற்றுங்கள்!

மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளையாகும். நமது மூளை பாதிப்படைந்தால் அனைத்து செயல்களும் பாதிப்படையும். நமது மூளையைப் பாதிக்கும் செயல்கள் மற்றும் காரணிகள் பின்வருமாறு:-
 
1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது:
 காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் மூளை மெல்ல மெல்ல செயல் இழக்கும் அபாயம் ஏற்படும்.
 
2. மிக அதிகமாகச்சாப்பிடுவது: 
இது மூளையில் இருக்கும் ரத்த நாள ங்கள் இறுகக்காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: 
இது புரோட்டின் நமது உடலில் சேர்வ தைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

4. தூக்கமின்மை: 
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்ட காலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. மாசு நிறைந்த காற்று: 
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம்பெறுவதில் இருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. புகை பிடித்தல்: 
மூளை சுருங்கவும், 'அல்ஷைமர்ஸ்'  எனும் அறிவாற்றல் இழப்பு/நினைவாற்றல் இழப்பு வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

7.மூளைக்கு வேலைகொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: 
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாகிறது.

8. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: 
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இதுநீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறை வான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

9.நோயுற்றகாலத்தில் மூளைக்கு வேலைகொடுப்பது:
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

10. பேசாமல் இருப்பது: 
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற் கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது
நன்றி: mandaitivu-ch.com

1 கருத்து:

Shyam சொன்னது…

Very good information

கருத்துரையிடுக