திங்கள், ஜூலை 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி




செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். (420)

பொருள்: காதுகளால் கேட்டறியும் சுவைகளைக் கேட்டு உணர்ந்து கொள்ளாமல், வாயால் சுவைத்து உண்ணப்படும் சுவைகளையே அறிந்த மக்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு நன்மை ஒன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக