வியாழன், ஜூலை 19, 2012

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம்


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். "- திருக்குறள்

நான் படித்த பள்ளியில் வாரம் ஒரு முறை ஒரு வகுப்பு தோட்டக்கலை பாடம் இருக்கும். எனது ஆசிரியர் திரு ராமச்சந்திரன் வேளாண்மையில் பட்டம் பெற்றவர். தோட்டத்தில் எது செய்தாலும் அறிவியலும் சேர்ந்தே சொல்லுவார். மேலும் அதை செயல் விளக்கமாக சொல்லுவார். அன்று அவர் சொல்லி தந்தது தாவரங்களில் இனப் பெருக்கம் மற்றும் இனப் பெருக்கத்தின் நுண்ணியல் பற்றியும் விளக்கினார். இனப் பெருக்கத்தில் விதைத்தல், போத்து நடுதல், பதியம் இடுதல், ஒட்டுதல் பற்றி தெளிவாக கூறி சில செயல்முறைகளையும் காட்டினார். இன்னும் எனக்கு நினைவில் உள்ளது........

அன்று ஒட்டுதல் பற்றி விளக்கமும் செயல்வடிவமும் நடந்தது. உயர் ஜாதி வகை மாமரத்தையும் கொட்டை மா கன்றையும் வைத்து ஒட்டுதல். இதனால் கொட்டை மா நல்ல மா வகையாக மாற்றம் வரும் என்று கூறினார்.. நான் வீட்டுக்கு சென்றதும் இதே ஞாபகம் மற்றும் குழப்பம்.....

இப்படி ஒட்டி சேர்க்கை செய்து புதிய வகை மா உருவாக்கப் படுகின்றதே, அதே போல் ஒரே மரத்தில் மா, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு பொன்ற மரகன்றுகளை ஒட்டுதல் செய்தால் ஒரே மரத்தில் எல்லா வகையான பழங்கள் கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் காலை பள்ளிக்கு சென்றதும் முதலில் என் ஆசிரியரிடம் இதைப்பற்றி சொன்னேன். அவர் சிரித்தார் மேலும் ஒரே வாகை பயிர்களைதான் ஒட்ட முடியும் ஏனனில் அதன் செல்கள்தான் ஒட்டிக்கொள்ளும் மாற்று கன்றுகள் ஒட்டாமல் காய்ந்துவிடும் என்றார். இது எனக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. மாறாக மேலும் நல்ல விவரங்கள் தெரிந்தது.

கீழெ உள்ள படங்களில் உள்ள செடிகளை பார்த்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. அதை உங்களிடம் பகிர்வதில் ஒரு ஆணந்தம்........

மேலெயுள்ள இரண்டு படங்களை பார்க்கும்பொழுது இதன் தண்டு ஒரு தூண் போல தெரியும். ஆம் இதில் எட்டு ஒரேவகையான செடியைக் கொண்டு ஒட்டுதல் மூலம் ஒவ்வொரு செடியுடன் ஒட்டி ஒரு தூண்போன்று மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக